Loading...

Articles.

Enjoy your read!

உழவன்

உழவா!!

மண்ணிலே நீயும் நீரும்

மனிதனின் பசியும் ஆரும்!

சேற்றிலே உங்கள் கால்கள்

சோற்றிலே எங்கள் கைகள்!

உன் கண்ணிலே நீரும் வடியும்-அதைத்

துடைக்க மண்ணிலே பயிரும் விளையும்!

பயிர் விதைகளை நீயும் விதைத்தாய் 

உயிர் வதைகளை நீயே தடுத்தாய்!

வீண் களைகளை நீயும் களைந்தாய்..

உன் கவலைகளை நீயே மறந்தாய்!!

பயிரின் மீது உனக்கோ காதல்- எங்கள் 

உயிருக்கு நீயே காவல்!

உனக்குள் பல வேதனை-முறியடித்து

புரிவாய் பல சாதனை!

உளையில் இறங்கி உழைத்தாய் உழவா! 

உணவை நீயே விளைத்தாய் உழவா!!

உழவன் இல்லையேல் உலகம் இல்லை..

உலகிற்கு அது புரியவில்லை...

வணங்குகிறேன் உழவா ....

அனைவரும் உழ வா!!!!!

 

Tagged in : Manithan, Ulagam, Uzhavan,

   

Similar Articles.