Loading...

Articles.

Enjoy your read!

தனிமை

ஒரு வார்த்தை,,

இரு விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளின் கேள்விக்குப் பதில்,,

மூன்றெழுத்து உடையது,,

நான்கு திசைகளிலும் கலந்தது,,

ஐம்புனையும் ஆட்டிப்படைக்கும்,,

ஆறறிவு உள்ள மனிதப் பிறவியை உயிருள்ள போதே மரிக்கச் செய்யும் தன்மை கொண்டது,

வேறென்னவாக இருக்கும்,

தனிமை தான் ,

மதியை இழக்கும் அக்கணத்தில்,

மனத்தில் பிறக்கும் ஒருவித ரணம்!!

ரணமென்றால் என்னவாக இருக்கும்,!!?!!

தாயை இழந்த சேய், தன் இழப்பை நினைக்கும் அந்தக் கணம்!

காதலனைப் பிரிந்த காதலி கதறுவாள் தினம்!!

இதானோ ரணம், ஆம்; காயப் பட்டோர் அனுபவிக்கிறார்கள் னுதினம்!!!

தனிமை என்றால் பயமா என்ன?

தனிமை என்னும் தலைப்பில் கவிதை எழுத நான் வார்த்தைகளை அழைத்த போது, அவை வரமாட்டேன் என்றன, அவைகள் கூடத் தனிமையை எண்ணி அஞ்சினர் போல !

_இப்படிக்கு

உம் அனைவரைப் போலவே மனதில் ரணமுள்ள

சராசரி பெண் ஆகிய நான்!

Tagged in : LONELINESS, THOUGHTS, feelings, Pain, life,

   

Similar Articles.