Loading...

Articles.

Enjoy your read!

பிரித்தாயிற்று

பிரித்தாயிற்று ஒருவழியாய் 
புன்செய்யும் நன்செய்யுமாய்

வகுத்தாயிற்று பின்னிரவோடு
வைர அட்டிகையும் வெள்ளி கிண்ணியுமாய் 

வாய்தா முடிந்தாயிற்று நேற்றோடு
வீட்டிற்கும் கொல்லைக்குமாய்

பகுந்தள்ளி குமித்தாயிற்று இந்தப்
பட்டத்து அறுவடையும் போருமாய்

மகனும் தம்பி மகளும் வளர்க்கும் 
தெருநாயைப் பார்க்கும்போதுதான்
நினைவு வருகிறது,

தம்பியைத் தாயென்றெண்ணி
கால்களுக்கிடையே உரசி ஓடிவந்த
அதன் தாய் நாயை.

Tagged in : change, nature, human,

   

Similar Articles.