Loading...

Articles.

Enjoy your read!

என் சரிபாதி

இதமாய் வீசும் தென்றல் போலவே

இதயத்தில் துள்ளி விளையாடும் மான்குட்டியே!

அனைத்து செல்லப் பெயர்கள் கொண்டு உன்னை

அழைத்தாலும் போதாது அன்பு நாய்க்குட்டியே!

 

வானத்தில் மிதக்கும் மேகம் போல நீ

மடியில் தவழ்கிறாய்

பயந்து போன பட்டாம்பூச்சியாய் நீயும்

ஓடி ஒளிகிறாய்!

 

அரும்பு மீசைக் கொண்டு உயிரில் ஓர்

ஓவியம் தீட்டுகிறாய்

விண்மீன் கண்களால் இருண்ட வாழ்க்கையில்

புது வெளிச்சம் பாய்ச்சுகிறாய்!

 

உன் நகம் கொண்டு என் மேல்

தடம் பதித்தாய்

என் நினைவுகளில் எப்போதும் நீங்காத

இடம் பிடித்தாய்!

 

உன்னை விட்டுப் பிரிந்தால்

என் பாதையை மறக்கிறேன்

நீயும் தொலைந்து போனால்

என் பாதியை இழக்கிறேன்;

 

வண்ணம் நிறைந்த வானவிலே

உன்னைப் பிரியமாட்டேன் எந்நாளுமே!

Tagged in : DOG LOVERS, FRIEND, PETS LOVE, dog,

   

Similar Articles.