Loading...

Articles.

Enjoy your read!

ஆசான்

கரும்பலகையில் எழுதுகையில்

கரைந்து விழும் மாக்கட்டியைப் போல எங்கள்

கல்வி அறியாமையையும்

கரைந்து விழ செய்தீர்கள்

தோல்விகளிலே துவண்டாலும்

தோளில் தட்டி எமைத் தேற்றினீர்கள்

வெற்றிப் படியை நாங்கள்

பற்றிப்பிடிக்க ஏணிப் படியாய் எமைத் தாங்கியவர் நீங்கள்

மாணவர்கள் பண்பட்டு சிறக்க

மாண்புடன் உயரே பறக்க

உறுதுணையாய் வழிநடத்திய   

உயர்ந்த உள்ளம் படைத்தவர் நீங்கள்

எங்கள் அறிவு தாகம் தீர்க்கும்

அருவியாய் இருந்தீர்கள்

நல்ல மாணவர்களை உருவாக்கும்     

நல் எண்ணம் படைத்த உங்களின்

நற்பணி தொடரட்டும் எங்களின்

நன்றிகளோடு...

Tagged in : AASAAN, KALVI, poem,

   

Similar Articles.